போயிங் 777 விமானங்கள் தரையிறக்கப்பட்டன

Date:

உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் போயிங் 777 விமான சேவைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இன்று நண்பகல் முதல் இந்த விமான சேவை இடைநிறுத்தம் அமுலுக்கு வருவதாக போயிங் 777 உற்பத்தியாளர்களான அமெரிக்க நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் டென்வர் விமான நிலையத்தில் இருந்து 231 பயணிகளுடன் புறப்பட்ட போயிங் 777 ரக விமானம் ஒன்றின் இயந்திரம் ஒன்றில் தீ பற்றிக் கொண்டதாலேயே இந்த அவசர முடிவு எடுக்கப்பட்டது. குறிப்பிட்ட விமானம் உடனடியாக மீண்டும் தரையிறக்கப்பட்டு பயணிகள் அதிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

ஜப்பானின் விமான சேவைகள், தென் கொரிய விமான சேவை என்பன உற்பட உலக நாடுகள் பல போயிங் 777 விமானங்களின் சேவைகளை உடனடியாக நிறுத்தி உள்ளன. குறிப்பிட்ட விமானங்களின் என்ஜின்கள் குறித்து தீவிர விசாரணைகளும் சோதனைகளும் உடனடியாக தொடங்கப்பட்டுள்ளன. அவை முடியும் வரை அவற்றின் சேவைகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...