வவுனியாவில் கால்நடை வளர்ப்பாளர்களின் பிரச்சினை தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்ட அபிவிருத்தி குழு தலைவர்

Date:

வவுனியா மாட்டத்தின் சில பகுதிகளில் குளத்தின் அலைகரை பகுதிகளை அத்துமீறி வேலி அமைத்துள்ள குளங்களை பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமாகிய கு.திலீபன்    இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
கால்நடைகள் நீர் குடிப்பதற்காகவும்   மேய்ச்சல் தரையாகவும் பயன்படுகின்ற குளத்தின் அலைகரை பகுதிகளை தனியார் அத்துமீறி வேலி அடைத்து வைத்திருப்பதாகவும் இதனால் கால்நடைகளுக்கான மேச்சல் தரை இல்லாது போயுள்ளது.
இதன் காரணமாக தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கால்நடைவளர்ப்பாளர்களினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாகவே பாராளுமன்ற உறுப்பினர் நேரில் சென்று பார்வையிட்டார்.
குறிப்பாக வவுனியா பத்தினியார்மகிழங்குளம்,ஓயார்சின்னக்குளம், கதிர்காமசின்னக்குளம் ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறான பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
 இதன்போது கால்நடை வளர்ப்பாளர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்ததோடு இப்பிரச்சினை தொடர்பாக உரிய அதிகாரிகளை தொடர்புகொண்டு விரைவாக தீர்த்துத்தருவதாக பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமாகிய கு.திலீபன் கால்நடை வளர்ப்பாளர்களிடம் தெரிவித்தார்.
வவுனியா துவாரகன்

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...