ஹொரவ்பொத்தான மஸ்ஜிதுகள் சம்மேளனத்திற்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்குமிடைலான ஒன்றுகூடல்

Date:

ஹொரவ்பொத்தான மஸ்ஜிதுகள் சம்மேளனத்திற்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்குமிடைலான ஒன்றுகூடலொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை(21) ஹொரவ்பொத்தான பஷார் பள்ளிவாசலில் அதன் நிர்வாக சபை தலைவர் தேசமான்ய, தேசகீர்த்தி A.M.A சியாம் ஹாஜியார் தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் ஹொரவ்பொத்தான பஷார் பள்ளிவாசலின் செயலாளர் அப்துற்றஹ்மான் (நளீமி) அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து ஹொரவ்பொத்தான பஷார் பள்ளிவாசலின் தலைவர் தேசமான்ய, தேசகீர்த்தி A.M.A சியாம் ஹாஜியார் அவர்கள் தலைமை உரை நிகத்தினார்.
இதனையடுத்து முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர் நிம்ஷாத் ஒன்றுகூடலின் முக்கியத்துவம் பற்றி தெளிவுபடுத்தினார். அஹதிய்யா பாடசாலைகளை மஸ்ஜித்களில் ஆரம்பித்தல், பதிவு செய்யப்படாத மஸ்ஜித் நிருவாகிகளை பதிவு செய்தல், பதிவு செய்யப்படாத பள்ளிவாசல்களை பதிவு செய்து கொள்ளல் போன்ற விடயங்களை அவர் தெளிவு படுத்தினார்.
குறித்த கூட்டத்தில் ஹொரவ்பொத்தான மஸ்ஜிதுகள் சம்மேளனத்தின் உறுப்பினர்கள், ஹொரவ்பொத்தான ஜம்மிய்யதுல் உலமா சபை உறுப்பினர்கள் மற்றும் ஹொரவ்பொத்தான, கெப்பித்திகொல்லாவ பிரதேச பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
முஹம்மட் ஹாசில் 

Popular

More like this
Related

நாகரிக அரசியல் செய்யும் விஜய்: காதர் மொய்தீன் பாராட்டு!

இந்திய முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீனை முதல்வர் விஜய்...

வரலாறு படைக்கும் கஹட்டோவிட அல் பத்ரியா மகா வித்தியாலயம்

கஹட்டோவிட அல் பத்ரியா மகா வித்தியாலயம் 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற...

இலங்கையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் ‘பௌத்த – முஸ்லிம் உரையாடல்’ நூல் வெளியீடு இன்று மாலை BMICH-ல்

இலங்கையில் பல சமய, மத நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்தும்...

அதிவேக வீதியின் அடுத்த கட்ட நிர்மாணப் பணிகளுக்கு அமைச்சரவை அனுமதி

மத்திய அதிவேக வீதியின் ரம்புக்கனை முதல் கலகெதர வரையான பகுதியின் நிர்மாணப்...