அமெரிக்காவில் கொவிட் மரணங்கள் ஐந்து லட்சத்தை தாண்டியது

Date:

அமெரிக்காவில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை இலங்கை நேரப்படி இன்று அதிகாலையில் ஐந்து லட்சத்தை தாண்டியுள்ளது. உலகில் கொவிட்-19 காரணமாக ஒரு நாட்டில் ஏற்பட்டுள்ள ஆகக் கூடுதலான மரண எண்ணிக்கை இதுவாகும். இன்று காலையில் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய அமெரிக்க ஜனாதிபதி, கொவிட் மரண எண்ணிக்கை குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.

ஒரு தேசம் என்ற வகையில் எம்மால் தாங்க முடியாத ஒரு கொடுமையாகவே நான் இதைப் பார்க்கிறேன. எமது துயரங்களுக்கு எதிராக நாம் உணர்ச்சியற்றவர்களாக இருக்கும் நிலையை எதிர்த்து நாம் போராட வேண்டும் என்று அவர் கூறினார். அமெரிக்க ஜனாதிபதி உப ஜனாதிபதி மற்றும் அவர்களது குடும்பத்தவர்கள் வெள்ளை மாளிகை முன்றலில் கொவிட்டால் இறந்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தினர். அத்தோடு மெழுகுவர்த்திகளை ஏற்றியும் அவர்கள் அஞ்சலி செலுத்தினர். இரண்டு கோடி 81 லட்சம் அமெரிக்கர்கள் கொரோணா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...