இலங்கையில் ஆட்சியமைக்குமா பா.ஜ.க? | அடியோடு நிராகரித்தார் உதய கம்மன்பில

Date:

இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதாக் கட்சி இலங்கையில் ஆட்சியமைப்பது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்குமாக இருந்தால் இலங்கை அரசு அதற்கு பதிலளிக்கும் என அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் இன்று செவ்வாய்க் கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

திரிபுரா மாநில முதலமைச்சர் பிப்லாப் குமார் வெளியிட்டுள்ள கருத்தானது உத்தியோகபூர்வமானது அல்ல . இதனால் இது தொடர்பாக இலங்கை அரசின் நிலைப்பாட்டைக் கூற முடியாது.

இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் ஆட்சி அமைக்கும் திட்டத்தில் பா.ஜ.க. உள்ளது என இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவ்வாறு கூறியுள்ளார் என்று திரிபுரா மாநில முதலமைச்சர் பிப்லாப் குமார் கருத்து வெளியிட்டுள்ளாரே தவிர, அமித் ஷா எங்கேனும் அவ்வாறு கூறியுள்ளார் என்று செய்திகள் எதுவும் வெளிவரவில்லை.

இதனால் இந்த விடயத்தை நாங்கள் வெறும் வதந்தியாகவே பார்க்கின்றோம் என்றார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...