வடக்கு மாகாண ரீதியில் வவுனியாவில் குத்துச்சண்டை பயிற்சி பட்டறையும் | சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

Date:

வடக்கு மாகாண ரீதியில் வவுனியாவில் குத்துச்சண்டை பயிற்சி பட்டறையும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்று (14) நடைபெற்றது.

வடக்கு மாகாண பிரேஞ் சவாட் கிக் பொக்சிங் அமைப்பின் தலைவர் எம்.எஸ்.நந்தகுமார் தலைமையில் இப்பயிற்சி பட்டறை ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.

இலங்கை பிரேஞ் சவாட் கிக் பொக்சிங் அமைப்பின் தலைவரும், சர்வதேச தலைமை பயிற்றுவிப்பாளருமாகிய சி.பூ. பிரசாத் விக்கிரமசிங்க வளவாளராக கலந்துகொண்டு வடக்கு மாகாண வீர, வீராங்கனைகளுக்கு பயிற்சிகளை வழங்கியிருந்தார்.

அத்துடன் அமைப்பின் பிரதித்தலைவர் காசன் ஜெயசேகர, செயலாளர் பாரீஸ் மௌலானா, பொருளாளர் சரீட் சோனல் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

வடக்கு மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 200 வீர, வீராங்கனைகளுக்கு கிக் பொக்சிங் பயிற்சி பட்டறையானது 13-02-2021 மற்றும் 14-02-2021 வரை நடைபெற்று நேற்று மாலை பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றது.

நிகழ்வில் விருந்தினர்களாக வவுனியா நகரசபையின் பிரதித் தலைவர் கெ.குமாரசாமி, முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.மயூரன், சமூகசேவையாளர் எஸ்.கஜேந்திரகுமார், வவுனியா மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் கெ.கமலன், வர்த்தகரும், சமூக ஆர்வலருமான எஸ்.ரூபன் மற்றும் காப்புறுதி நிறுவனத்தின் முகாமையாளர் ஆர்.சுவிதர் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்ட வீரர்களுக்கு சான்றிதழ்களை வழங்கியிருந்தனர்.

வவுனியா நிருபர்
கோகுலன்

Popular

More like this
Related

‘குர்ஆனின் வழியில் கருணை காட்டுங்கள்’; அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக அலி சப்ரி குரல்

நபிகள் நாயகத்தின் கண்ணியத்தைப் பாதுகாப்பதைப் பற்றி பேசும் போதெல்லாம், அவரது கருணை,...

இரட்டையையாளர்களான மருத்துவத் துறை மாணிவிகள் இருவருக்கு ஐபேட் வழங்கி வைப்பு.

உலக முஸ்லிம் சமேலனம் (ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமி) – இலங்கை அலுவலகத்தின்...

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்கான தீவிர முயற்சி!

சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை...

அனோஜன் வழக்கை உன்னிப்பாக அவதானிக்கும் இலங்கை அரசு!

சவூதி அரேபியாவில் தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான அனோஜன்...