அனோஜன் வழக்கை உன்னிப்பாக அவதானிக்கும் இலங்கை அரசு!

Date:

சவூதி அரேபியாவில் தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசா தொடர்பான வழக்கை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு நெருக்கமாகக் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.
ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் ஊடாகவும், கொழும்பிலுள்ள சவூதி அரேபியத் தூதரகத்துடன் ஒருங்கிணைந்தும் வழக்கின் முன்னேற்றங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், இராஜதந்திர வழிமுறைகள் ஊடாக சம்பந்தப்பட்ட சவூதி அரேபிய அதிகாரிகளுடன் தொடர்ச்சியான தொடர்புகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் மூலம், அனோஜன் சிவராசாவின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், அவருக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை

இன்று (19) முதல் அடுத்த சில நாட்களுக்குத் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில்...

மன்னிப்பின் உயரிய முன்மாதிரி: சவூதியில் மரண தண்டனையை எதிர்நோக்கும் அனோஜனுக்கு இராஜதந்திர வழியில் மன்னிப்பு பெறக் கோரிக்கை!

தனது வாழ்நாளில் தனக்கு சொல்லொணாத் துயரங்களையும் அவமானங்களையும் ஏற்படுத்தியவர்களைக்கூட மன்னித்தவர் முஹம்மது...

சவூதி மரண தண்டனையிலிருந்து மகனைக் காப்பாற்றுமாறு ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கை புலம்பெயர் தொழிலாளி...

சவூதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: அரசாங்கம் உடனடியாக தலையிட சாணக்கியன் எம்.பி அவசர கோரிக்கை!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கை இளைஞர் சிவராசா...