பலசரக்கு விற்பனை நிலையத்தில் தீ

Date:

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள பலசரக்கு விற்பனை நிலையம் நேற்றுமாலை தீபிடிந்து எரிந்தமையால் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்துநாசமாகியது.
குறித்த வர்த்தகநிலையம் இன்றுமாலை திறக்கப்பட்டிருந்தது.   இந்நிலையில் மாலை 5 மணியளவில் திடீர்என்று கடை தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதனை அவதானித்த அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் கிராமமக்கள் தீயை அணைப்பதற்கு கடுமையான முயற்சிகளை எடுத்தபோதும் வியாபாரநிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பொருட்களும் முற்றாக எரிந்து சாம்பலாகியது.
சுமார் 6 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான பொருட்கள் தீயில்  எரிந்துள்ளதாக வியாபார நிலைய உரிமையாளரால் தெரிவிக்கப்படுகின்றது.
மின்சார ஒழுக்கி தீவிபத்திற்கு காரணமாக இருக்கும் என்று தெரிவிக்கப்படும் நிலையில்  சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...