புத்தளம் புகையிரத பயணிகளுக்கான விசேட அறிவிப்பு

Date:

கட்டுநாயக்க மற்றும் புத்தளம் புகையிரத நிலையங்களுக்கு இடையிலான புகையிரத பயணங்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையில் தற்காலகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளம் புகையிரத பாதையின் குரண மற்றும் நீர்கொழும்பு புகையிரத நிலையங்களுக்கு இடையில் இரட்டை வழி பாதை அபிவிருத்து காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், குரண மற்றும் நீர்கொழும்பு இடையேயான புகையிரத பாதை 26 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் 28 ஆம் திகதி இரவு 8.30 மணி வரை மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த காலப்பகுதியில் கட்டுநாயக்க மற்றும் புத்தளம் புகையிரத நிலையங்களுக்கு இடையே புகையிரத சேவை முன்னெடுக்கபடாத காரணத்தினால், கொழும்பு கோட்டை மற்றும் கட்டுநாயக்க புகையிரத நிலையங்களுக்கு இடையில் மட்டுமே புகையிரத சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...