போயிங் 777 விமானங்கள் தரையிறக்கப்பட்டன

Date:

உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் போயிங் 777 விமான சேவைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இன்று நண்பகல் முதல் இந்த விமான சேவை இடைநிறுத்தம் அமுலுக்கு வருவதாக போயிங் 777 உற்பத்தியாளர்களான அமெரிக்க நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் டென்வர் விமான நிலையத்தில் இருந்து 231 பயணிகளுடன் புறப்பட்ட போயிங் 777 ரக விமானம் ஒன்றின் இயந்திரம் ஒன்றில் தீ பற்றிக் கொண்டதாலேயே இந்த அவசர முடிவு எடுக்கப்பட்டது. குறிப்பிட்ட விமானம் உடனடியாக மீண்டும் தரையிறக்கப்பட்டு பயணிகள் அதிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

ஜப்பானின் விமான சேவைகள், தென் கொரிய விமான சேவை என்பன உற்பட உலக நாடுகள் பல போயிங் 777 விமானங்களின் சேவைகளை உடனடியாக நிறுத்தி உள்ளன. குறிப்பிட்ட விமானங்களின் என்ஜின்கள் குறித்து தீவிர விசாரணைகளும் சோதனைகளும் உடனடியாக தொடங்கப்பட்டுள்ளன. அவை முடியும் வரை அவற்றின் சேவைகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...