ஹொரவ்பொத்தான மஸ்ஜிதுகள் சம்மேளனத்திற்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்குமிடைலான ஒன்றுகூடல்

Date:

ஹொரவ்பொத்தான மஸ்ஜிதுகள் சம்மேளனத்திற்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்குமிடைலான ஒன்றுகூடலொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை(21) ஹொரவ்பொத்தான பஷார் பள்ளிவாசலில் அதன் நிர்வாக சபை தலைவர் தேசமான்ய, தேசகீர்த்தி A.M.A சியாம் ஹாஜியார் தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் ஹொரவ்பொத்தான பஷார் பள்ளிவாசலின் செயலாளர் அப்துற்றஹ்மான் (நளீமி) அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து ஹொரவ்பொத்தான பஷார் பள்ளிவாசலின் தலைவர் தேசமான்ய, தேசகீர்த்தி A.M.A சியாம் ஹாஜியார் அவர்கள் தலைமை உரை நிகத்தினார்.
இதனையடுத்து முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர் நிம்ஷாத் ஒன்றுகூடலின் முக்கியத்துவம் பற்றி தெளிவுபடுத்தினார். அஹதிய்யா பாடசாலைகளை மஸ்ஜித்களில் ஆரம்பித்தல், பதிவு செய்யப்படாத மஸ்ஜித் நிருவாகிகளை பதிவு செய்தல், பதிவு செய்யப்படாத பள்ளிவாசல்களை பதிவு செய்து கொள்ளல் போன்ற விடயங்களை அவர் தெளிவு படுத்தினார்.
குறித்த கூட்டத்தில் ஹொரவ்பொத்தான மஸ்ஜிதுகள் சம்மேளனத்தின் உறுப்பினர்கள், ஹொரவ்பொத்தான ஜம்மிய்யதுல் உலமா சபை உறுப்பினர்கள் மற்றும் ஹொரவ்பொத்தான, கெப்பித்திகொல்லாவ பிரதேச பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
முஹம்மட் ஹாசில் 

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...