ஹொரவ்பொத்தான மஸ்ஜிதுகள் சம்மேளனத்திற்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்குமிடைலான ஒன்றுகூடல்

Date:

ஹொரவ்பொத்தான மஸ்ஜிதுகள் சம்மேளனத்திற்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்குமிடைலான ஒன்றுகூடலொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை(21) ஹொரவ்பொத்தான பஷார் பள்ளிவாசலில் அதன் நிர்வாக சபை தலைவர் தேசமான்ய, தேசகீர்த்தி A.M.A சியாம் ஹாஜியார் தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் ஹொரவ்பொத்தான பஷார் பள்ளிவாசலின் செயலாளர் அப்துற்றஹ்மான் (நளீமி) அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து ஹொரவ்பொத்தான பஷார் பள்ளிவாசலின் தலைவர் தேசமான்ய, தேசகீர்த்தி A.M.A சியாம் ஹாஜியார் அவர்கள் தலைமை உரை நிகத்தினார்.
இதனையடுத்து முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர் நிம்ஷாத் ஒன்றுகூடலின் முக்கியத்துவம் பற்றி தெளிவுபடுத்தினார். அஹதிய்யா பாடசாலைகளை மஸ்ஜித்களில் ஆரம்பித்தல், பதிவு செய்யப்படாத மஸ்ஜித் நிருவாகிகளை பதிவு செய்தல், பதிவு செய்யப்படாத பள்ளிவாசல்களை பதிவு செய்து கொள்ளல் போன்ற விடயங்களை அவர் தெளிவு படுத்தினார்.
குறித்த கூட்டத்தில் ஹொரவ்பொத்தான மஸ்ஜிதுகள் சம்மேளனத்தின் உறுப்பினர்கள், ஹொரவ்பொத்தான ஜம்மிய்யதுல் உலமா சபை உறுப்பினர்கள் மற்றும் ஹொரவ்பொத்தான, கெப்பித்திகொல்லாவ பிரதேச பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
முஹம்மட் ஹாசில் 

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...