பதுளை பகுதியில் தொடர் நிலஅதிர்வுகள் | மக்களுக்கு எச்சரிக்கை

Date:

பதுளை − மடூல்சீமை பகுதியில் மண்சரிவு ஏற்படுவதற்கான அபாய நிலைமை காணப்படுவதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவிக்கின்றது.

மடூல்சீமை − எகிரிய பகுதியில் அண்மையில் ஏற்பட்ட நில அதிர்வு தொடர்பில் ஆராய்ந்ததை அடுத்தே, பணியகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

குறித்த பகுதியில் 1.5 ரிக்டர் அளவிலான நிலஅதிர்வு கடந்த சில தினங்களுக்கு முன்னர் பதிவாகியிருந்தது.

இதற்கு முன்னரும் குறித்த பகுதியில் இருவேறு சந்தர்ப்பங்களில் நில அதிர்வு பதிவாகியிருந்தது.

இந்த நிலஅதிர்வு குறித்து புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் அதிகாரிகள் பிரதேசத்திற்கு சென்று ஆராய்ந்துள்ளனர்.

இவ்வாறு நடத்தப்பட்ட ஆய்வுகளின் ஊடாக, குறித்த பகுதியில் மாணிக்கக்கல் அகழ்வு மேற்கொள்ளப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்தே, மண்சரிவு ஏற்படுவதற்கான அபாயமும், மண்மேடுகள் சரிவதற்கான அபாயமும் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...