அநுராதபுரத்தில் வேகமாக பரவும் தோல் நோய் தொற்று

Date:

அனுராதபுர பகுதியில் Tinea என்ற பூஞ்சை தொற்று காரணமாக ஏற்படும் தோல் நோய் வேகமாக பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் இன்று (04) தெரிவித்தனர்.
இந்த நோயால் “பாதிக்கப்பட்டவர்களின் தோலில் சிவப்பு புள்ளிகள் தோன்றி படிப்படியாக பரவும், Tinea பூஞ்சை தொற்று தொடுவதன் மூலமாகவோ அல்லது பாதிக்கப்பட்ட நபரின் உடைகள் மூலமாகவோ பரவக்கூடும்” என்று அனுராதபுர போதனா வைத்தியசாலையின் பாலியல் சுகாதார மையத்தின் வைத்தியர் ஹேமா வீரகோன் இன்று(04) தெரிவித்தனர்.
வைத்தியர் ஹேமா வீரகோனின் கூற்றுப்படி, ஒரு தகுதி வாய்ந்த வைத்தியரை அணுகி, பரிந்துரைக்கப்பட்ட மருத்துவ வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்த பூஞ்சை தொற்று குணமாகும்.
பூஞ்சை தொற்றுநோய்களுக்கு, சரியான அளவை பரிந்துரைத்த சிகிச்சையை ஆறு வார காலத்திற்கு பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்துகையில், வைத்தியர் ஹேமா வீரகோன், சிகிச்சை காலத்திற்கு இடையில் நிறுத்தப்படுவது நிலைமையை தீவிரப்படுத்தக்கூடும் என்றும் சுட்டிக்காட்டினார்.
முஹம்மட் ஹாசில்

Popular

More like this
Related

நாகரிக அரசியல் செய்யும் விஜய்: காதர் மொய்தீன் பாராட்டு!

இந்திய முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீனை முதல்வர் விஜய்...

வரலாறு படைக்கும் கஹட்டோவிட அல் பத்ரியா மகா வித்தியாலயம்

கஹட்டோவிட அல் பத்ரியா மகா வித்தியாலயம் 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற...

இலங்கையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் ‘பௌத்த – முஸ்லிம் உரையாடல்’ நூல் வெளியீடு இன்று மாலை BMICH-ல்

இலங்கையில் பல சமய, மத நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்தும்...

அதிவேக வீதியின் அடுத்த கட்ட நிர்மாணப் பணிகளுக்கு அமைச்சரவை அனுமதி

மத்திய அதிவேக வீதியின் ரம்புக்கனை முதல் கலகெதர வரையான பகுதியின் நிர்மாணப்...