இனிமேல் குடும்பப் பிரச்சினைகளிலும் பொலிஸார் தலையிடலாம்

Date:

நாட்டில் அதிகரித்து வரும் வீட்டு வன்முறைகளைத் தடுக்கும் வகையில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் சர்ச்சைகளை தீர்த்து வைக்கும் விடயத்தில் தலையிடுமாறு பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்துக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் சர்ச்சைகள் அதன் தொடராக இடம்பெறும் வீட்டு வன்முறைகள் என்பன கடந்த காலங்களில் கணிசமாக அதிகரித்துள்ளன. குறிப்பாக மலையகப் பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அண்மைக்கால மதிப்பீடுகள் தெரிவிக்;கின்றன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சில நேரங்களில் இந்த சம்பவங்கள் கொலையிலும் முடிவடைகின்றன. கணவன் மனைவியை கொல்வது அல்லது மனைவி கணவனைக் கொல்வது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அண்மையில் 28 வயதான தனது மனைவியை கொலை செய்து கொத்மலை நீர்த் தேக்கத்தில் வீசிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. குடும்பத் தகராறே இதற்கு முக்கிய காரணம் என்று தெரிய வந்துள்ளது.

எனவே இவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக குடும்பத் தகராறுகளில் தலையிட்டு சமரசம் செய்து வைக்குமாறு சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...