இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை : வெளிவிவகார அமைச்சு தகவல்!

Date:

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து இலங்கை இராஜதந்திர தூதரகங்களுடனும் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாகத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு, இது தொடர்பான முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளது:

ஏதேனும் அவசரத் தேவைகள் ஏற்பட்டால், பொதுமக்கள் தூதரகங்களைத் தொடர்புகொள்வதற்காக பிரத்யேக அவசர தொலைபேசி இலக்கங்கள் (Hotlines) தற்போது நிறுவப்பட்டு வருகின்றன.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள இலங்கையர்களுக்கு இதுவரையில் பாரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் வெளிவிவகார அமைச்சோடு தொடர்ச்சியான தொடர்பில் உள்ளனர்.

தேவையான அவசர தொலைபேசி இலக்கங்கள் விரைவில் முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின் மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மாகாணங்களிலும்...

புத்தாண்டு என்பது பண்டிகை மட்டுமல்ல, எமது கலாசார விழுமியங்களில் பொதிந்துள்ள சுபீட்சம், ஒற்றுமை, சகவாழ்வு: பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

சூரியன் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குச் சங்கமிப்பதையும், அறுவடைப் பணிகள் நிறைவடைந்து...

கூட்டுச் செயல்பாடுகள் மூலம் வெளிப்படும் சமூக-கலாசார பிணைப்புடன் இந்த புத்தாண்டு அமைய நல்வாழ்த்துகள்: ஜனாதிபதியின் புத்தாண்டு செய்தி

பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள மற்றும்...

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...