இறந்த உடல்களை இரணை தீவில் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் | இரணைதீவு பகுதிக்குள் நுழைய ஊடகங்களுக்கு தடை

Date:

கிளிநொச்சி இரணை தீவு பகுதியில் கொரோனா தொற்று காரணமாக இறந்த உடல்களை புதைப்பதற்கு அரசங்கம் மேற்கொண்ட தீர்மானத்தை எதிர்த்து இன்றைய தினம் புதன் கிழமை காலை 9 மணியளவில் இரணை மாதா நகர் பகுதியின் பங்குதந்தை மடுத்தீன் பத்தினாதர் அடிகளார் தலைமையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம் பெற்றது.
குறித்த போராட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட கோட்ட முதல்வர், அருட்தந்தைகள், அருட்சகோதரிகள் மெசிடோ நிறுவனத்தினர், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினர் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு அரசாங்கத்தின் தீர்மனத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுத்ததுடன் அரசாங்கத்திற்கு அனுப்பி வைப்பதற்கான மகஜரும் வாசிக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தின் பின்னர் இரணை மாதா நகர் பகுதியில் இருந்து படகு மூலம் இரணை தீவுக்கு பொது மக்கள் மற்றும் ஊடகவிலாளர்கள் செல்ல முயன்ற போது ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து போராட்ட குழுவினரால் பூநகரி பிரதேச செயலாளர் ,யாழ்மறைமாவட்ட ஆயர் ,யாழ் மனித உரிமை ஆணைகுழு காரியாலங்களுக்குரிய மகஜர் நேரடியாக கையளிக்கப்பட்டுள்ளது.
மன்னார்  நிருபர்

Popular

More like this
Related

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (04) நாட்டின் சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை...

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...