ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கையை தொடர்ந்து தம்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜமாஅதே இஸ்லாமியின் அறிக்கை

Date:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை பற்றி ஊடகங்களில் வெளியான செய்திகளில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி பற்றியும், மாணவர் இயக்கத்தைத் தொடர்புபடுத்தியும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் தொடர்பாகவும் பல அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதை அறிந்து கொண்டோம்.

இக்குற்றச்சாட்டுக்களை நாம் முற்றாக மறுக்கும் அதேவேளை இவை பற்றிய எந்த நீதி விசாரணைக்கும் எமது பூரண ஒத்துழைப்பை வழங்கவும் உறுதியளிக்கிறோம்.

தவறான நோக்கங்களுடன் ஓரிருவரினால் வழங்கப்பட்ட சாட்சியங்களை அடிப்படையாக வைத்தே இந்த முடிவுகள் பெரும்பாலும் எட்டப்பட்டுள்ளன என்றே நாம் நம்புகின்றோம்.

உரிய நீதி விசாரணைகளின் போது சட்ட ரீதியாக எமது குற்றமற்றதன்மையை நிரூபிக்க முடியும் என்பதை நாம் உறுதியாக நம்புகிறோம்.

எம்.எச்.எம். ஹஸன்
உதவிப் பொதுச் செயலாளர்
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
28.02.2021

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...