கொழும்பு − கிரான்பாஸ் பகுதியில் பாரிய தீ | 50திற்கும் அதிக வீடுகள் சேதம்

Date:

கொழும்பு − கிரான்பாஸ் − கஜீமா தோட்டத்தில் பரவிய பாரிய தீயினால், பல வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. இந்த தீ இன்று அதிகாலை 2.40 அளவில் பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் நிர்மானிக்கப்பட்டிருந்த சுமார் 50திற்கும் அதிகமான தற்காலிக வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.

பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவு இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் கூறுகின்றனர்.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், கிரான்பாஸ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...