கொழும்பு − கிரான்பாஸ் பகுதியில் பாரிய தீ | 50திற்கும் அதிக வீடுகள் சேதம்

Date:

கொழும்பு − கிரான்பாஸ் − கஜீமா தோட்டத்தில் பரவிய பாரிய தீயினால், பல வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. இந்த தீ இன்று அதிகாலை 2.40 அளவில் பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் நிர்மானிக்கப்பட்டிருந்த சுமார் 50திற்கும் அதிகமான தற்காலிக வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.

பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவு இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் கூறுகின்றனர்.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், கிரான்பாஸ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...