சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை மே 31இல்

Date:

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை மே மாதம் 31ம் திகதி ஆரம்பமாகும் என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
பாட்டலி சம்பிக்க ரணவக்க 2016ம் ஆண்டில் அமைச்சராகப் பதவி வகித்த போது இரவு நேரத்தில் ராஜகிரிய பகுதியில் ஜீப் ரக வாகனம் ஒன்றை ஓட்டிச் சென்று விபத்துக்கு உள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு இளைஞர்கள் மேசமான காயங்களுக்கு ஆளாயினர். அவர்களுள் ஒருவர் இன்னமும் நடமாட முடியாத வகையில் சக்கர நாற்காலியில் முடங்கி உள்ளார்.

இந்தச் சம்பவத்தை மூடி மறைக்க முன்னாள் அமைச்சர் சார்பில் அன்று பல முயற்சிகள் எடுக்கப்பட்டமை பின்னர் தெரிய வந்தது. அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட புதிய விசாரணைகளை அடுத்து சம்பிக்க ரணவக்க குற்றவாளியாகக் காணப்பட்டு அவருக்கு எதிரான குற்றப் பத்திரிகை கடந்த வாரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இன்று இந்த வழக்கு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இந்தக் குற்றப்பத்திரம் சம்பந்தமான பூர்வாங்க ஆட்சேபனை எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 27ம் திகதி நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்படும் என்றும் வழக்கு விசாரணை மே மாதம் 31ம் திகதி தொடங்கும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...