சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை மே 31இல்

Date:

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை மே மாதம் 31ம் திகதி ஆரம்பமாகும் என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
பாட்டலி சம்பிக்க ரணவக்க 2016ம் ஆண்டில் அமைச்சராகப் பதவி வகித்த போது இரவு நேரத்தில் ராஜகிரிய பகுதியில் ஜீப் ரக வாகனம் ஒன்றை ஓட்டிச் சென்று விபத்துக்கு உள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு இளைஞர்கள் மேசமான காயங்களுக்கு ஆளாயினர். அவர்களுள் ஒருவர் இன்னமும் நடமாட முடியாத வகையில் சக்கர நாற்காலியில் முடங்கி உள்ளார்.

இந்தச் சம்பவத்தை மூடி மறைக்க முன்னாள் அமைச்சர் சார்பில் அன்று பல முயற்சிகள் எடுக்கப்பட்டமை பின்னர் தெரிய வந்தது. அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட புதிய விசாரணைகளை அடுத்து சம்பிக்க ரணவக்க குற்றவாளியாகக் காணப்பட்டு அவருக்கு எதிரான குற்றப் பத்திரிகை கடந்த வாரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இன்று இந்த வழக்கு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இந்தக் குற்றப்பத்திரம் சம்பந்தமான பூர்வாங்க ஆட்சேபனை எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 27ம் திகதி நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்படும் என்றும் வழக்கு விசாரணை மே மாதம் 31ம் திகதி தொடங்கும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...