செளபாக்கியா வீட்டுத்திட்டத்தின் கீழ் ஏழு வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

Date:

செளபாக்கியா வீட்டுத்திட்டத்தின் கீழ்  ஏழு வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு. திருகோணமலை ,கிண்ணியா பிரதேசத்தில் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் சமுர்த்தி பயனாளிகளான  ஏழு குடும்பங்களுக்கு  சௌபாக்கிய வீட்டுத் திட்டத்தின்கீழ்  வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வு கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி. தலைமையகல்
நேற்று (08) திங்கட்கிழமை மாலை இடம் பெற்றது.

இதில் வழங்கப்பட்ட ஒவ்வொரு வீடுகளும் சுமார் 2 இலட்சம் பெறுமதியான இரண்டு அறைகளை கொண்டது.

இவ் வீடுகள் காக்காமுனை, நடுத்தீவு, பைசல் நகர், அண்ணல் நகர், ஆலங்கேணி மற்றும் கச்சக்கொடுதீவு போன்ற கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள சமுர்த்தி பயனாளிகளில் வறுமையிலுள்ள வீடற்றவர்களை தெரிவு செய்து வழங்கப்பட்டது

இந் நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.றியாத் ,  தலைமையக  சமுர்த்தி முகாமையாளர்  ஏ.முஹ்சீன்   குறிஞ்சாக்கேணி சமுர்த்தி வங்கி முகாமையாளர் எம்.ஏ.எம்.றிஸ்வி மகளிர் உத்தியோகத்தர் என்.பானு மற்றும் சமுர்த்தி உத்தியோக்தர்கள் என பலர் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.

இந் நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் தமது உரையில் கூறியதாவது:-

இந்த ஆட்சியில் வழங்கப்படுகின்ற இவ் வீட்டுத் திட்டத்தின் போது நீங்கள் எவ்வளவே பிரயோசனம் அடைகின்றீர்களோ அதற்காக நீங்கள் இந்த அரசாங்கத்திற்கு நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்க வேண்டும் என பிரதேச செயலாளர் பயனாளிகள் தெரிவித்துக் கொண்டார்.

ஏ.ஆர்.எம்.றிபாஸ்
கிண்ணியா நிருபர்

Popular

More like this
Related

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதித்து...

இன்று நடைபெறுகின்ற புத்தளம் பெரிய பள்ளிவாசல் தர்ம கர்த்தா சபை நியமனம் தொடர்பில் முறைப்பாடு

(குறிப்பு: புத்தளம் பெரிய பள்ளிவாசலுடைய நிர்வாக சபை தெரிவு இன்று மாலையில்...

இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள்: பொலிஸார் எச்சரிக்கை!

அதிவேகம் மற்றும் கவனயீனமாக வாகனம் ஓட்டுதல் தொடர்பான விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : சாட்சியத்தை வெளியிட தடை!

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பான வழக்கில், நீர்கொழும்பு சிறைச்சாலையின் பிரதம சிறை...