துருக்கி – இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கம் ஆரம்பம்

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர்களின் கோரிக்கையின் பேரில் துருக்கி-இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஸ்தாபித்தல் நிகழ்வு நேற்று (25) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேயவர்தன, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான துருக்கி நாட்டின் தூதுவர் ஆர்.டிமெட் செர்கெர்சியோக்லு ஆகியோர் உட்பட இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் கௌரவ. சுசில் பிரேமஜயந்த அவர்களும், செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. ஹர்ஷன ராஜகருண ஆகியோரும் தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...