நீர்ப்பாசன செழிப்பு கிராமிய குளங்கள் புனரமைப்பு திட்டம் மடு பிரதேச செயலாளர் பிரிவில் ஆரம்பித்து வைப்பு

Date:

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச அவர்களின் சௌபாக்கிய கொள்கையின் கீழ் நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்படும்    ‘நீர்ப்பாசன செழிப்பு’ எனும் 5000 கிராமிய விவசாயக் குளங்கள் மற்றும் அணைக்கட்டுகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் பிரகாரம் மடு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட  ஊமையார் துவரம் குளம் புனரமைப்பிற்கான அங்குராப்பண  நிகழ்வு இன்று சனிக்கிழமை (13) காலை  இடம் பெற்றது.
மன்னார் மாவட்டத்தில் சுமார் 138 குளங்களை மறுசீரமைப்பு செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய  மடு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட  ஊமையார் துவரம் குளம் புனரமைப்பிற்கான அங்குராப்பண  நிகழ்வு  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் சூமஸ்தான் தலைமையில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஏ. ஸ்ரான்லி டிமேல், மடுப் பிரதேச செயலாளர் , மத்திய நீர்ப்பாசன பணிப்பாளர், விவசாய உதவிப் பணிப்பாளர், நீர்ப்பாசன பொறியியலாளர்கள், கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்திற்காக சுமார் 8.6 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.குறித்த வேலைத் திட்டத்தின் பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்து வேலைத் திட்டத்தை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
(மன்னார் நிருபர்)

Popular

More like this
Related

டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்திற்கான 2026 திட்டங்கள்

டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் 2025 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம்...

இனிமேல் அமைதியைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்ற கடமை எனக்கு இல்லை: அமெரிக்க ஜனாதிபதி.

இனி அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்கப் போவதில்லை என்று நோர்வே பிரதமருக்கு...

பாகிஸ்தானில் கல்வி பயின்று திரும்பிய இலங்கை மாணவர்களுக்கு விசேட வரவேற்பு.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், பாகிஸ்தானில் அண்மையில் தமது கல்வியை நிறைவு செய்து...

மோசமான நிலையில் காற்றின் தரம்: சுவாச பிரச்சினைகள் ஏற்படும் அபாயம்.

நாட்டின் சில பகுதியில் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார...