வவுனியா நெடுங்கேணி காஞ்சூரமோட்டை கிராம மக்களின் பிரச்சினையை நேரில் சென்று பார்வையிட்ட | கு.திலீபன்

Date:

வவுனியா வடக்கு நெடுங்கேணி காஞ்சூரமோட்டை கிராம மக்களின்
பிரச்சினையை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் நேரில் சென்று
பார்வையிட்டுள்டளார்.

நெடுங்கேணி மருதோடை கிராம சேவகர் பிரிவில் காஞ்சூரமோட்டை
நாவலர் பண்னை கிராமம் கடந்த அரசாங்க காலத்தில் மீள்குடியேற்றம்
செய்யப்பட்ட நிலையில் கிராமத்துக்கான அடிப்படை வசதிகள் எதுகும் செய்து
கொடுக்கப்படாமல் இருந்த நிலையில் பொது மக்களின் வேண்டுகோளிற்கு
இணங்க வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட
அபிவிருத்தி குழு இணைத்தலைவருமான கு.திலீபன் நேரில் சென்று பொது
மக்களின் நிலைமைகளை பார்வையிட்டு ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு
சென்ற நிலையில் ஜனாதிபதியினால் வனவள திணைக்களத்திற்கு தகவல் வழங்கி
அந்த கிராமத்துக்குரிய மின் இணைப்புக்கு தடங்களாய் இருந்த மரங்களை
அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது மரங்கள் அகற்றப்பட்டு மின்னினைப்புக்குரிய ஆரம்ப கட்ட
வேலைகள் இடம்பெற்று வருவதை பாராளுமன்ற உறுப்பினர் நேரில்
சென்று பொதுமக்களையும் அந்த இடத்தினையும் பார்வையிட்டு கருத்து
தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ந.கலைச்செல்வன்
முல்லைத்தீவு

 

 

Popular

More like this
Related

ஃபேஸ்புக்கில் AI போலி வீடியோக்கள்: பிரதமரின் வீடியோக்கள் 12 ,லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றதால் அதிர்ச்சி!

ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் போலியான...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு புதிய CEO நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் பொறியியல் பிரிவின் தலைவராகப் பணியாற்றி வந்த விபுல்...

பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதில் மதத் தலைவர்களின் பங்கு: ஜெத்தாவில் சர்வதேச கருத்தரங்கம் தொடக்கம்!

ஜெத்தாவில் உள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) தலைமையகத்தில், "பெண்களுக்கு எதிரான...

அஸ்வெசும நிதி மோசடி: 6 ஆசிரியர்கள், மாவட்ட செயலக அதிகாரி பணிநீக்கம்!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 2 கோடி ரூபாய்க்கும் அதிக அஸ்வெசும...