அநுராதபுரத்தில் வேகமாக பரவும் தோல் நோய் தொற்று

Date:

அனுராதபுர பகுதியில் Tinea என்ற பூஞ்சை தொற்று காரணமாக ஏற்படும் தோல் நோய் வேகமாக பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் இன்று (04) தெரிவித்தனர்.
இந்த நோயால் “பாதிக்கப்பட்டவர்களின் தோலில் சிவப்பு புள்ளிகள் தோன்றி படிப்படியாக பரவும், Tinea பூஞ்சை தொற்று தொடுவதன் மூலமாகவோ அல்லது பாதிக்கப்பட்ட நபரின் உடைகள் மூலமாகவோ பரவக்கூடும்” என்று அனுராதபுர போதனா வைத்தியசாலையின் பாலியல் சுகாதார மையத்தின் வைத்தியர் ஹேமா வீரகோன் இன்று(04) தெரிவித்தனர்.
வைத்தியர் ஹேமா வீரகோனின் கூற்றுப்படி, ஒரு தகுதி வாய்ந்த வைத்தியரை அணுகி, பரிந்துரைக்கப்பட்ட மருத்துவ வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்த பூஞ்சை தொற்று குணமாகும்.
பூஞ்சை தொற்றுநோய்களுக்கு, சரியான அளவை பரிந்துரைத்த சிகிச்சையை ஆறு வார காலத்திற்கு பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்துகையில், வைத்தியர் ஹேமா வீரகோன், சிகிச்சை காலத்திற்கு இடையில் நிறுத்தப்படுவது நிலைமையை தீவிரப்படுத்தக்கூடும் என்றும் சுட்டிக்காட்டினார்.
முஹம்மட் ஹாசில்

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...