அமெரிக்காவில் கொவிட் நான்காவது அலை தாக்குதல் ஒன்று ஏற்படலாம் என அமெரிக்க சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் எச்சரிக்கை

Date:

அமெரிக்காவில் கொவிட் நான்காவது அலை தாக்குதல் ஒன்று ஏற்படலாம் என அமெரிக்க சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உருமாற்றம் பெற்று வீரியம் அடைந்து வரும் கொரோணா வைரஸ் அமெரிக்காவில் சுகாதாரத் துறையினருக்கு பெரும் சவாலாக மாறி உள்ளது.

தற்போது தடுப்பூசி வழங்கும் திட்டம் மக்கள் மத்தியில் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையிலும் கொவிட் பரவலும் அதன் வேகமும் சுகாதாரத் துறையினரை திணற வைத்துள்ளது. அண்மைக்கால கொவிட் பரவல் தரவுகள் தன்னை பெரும் கவலை அடைய வைத்துள்ளதாக அமெரிக்க நோய் கடடுப்பாட்டு மற்றும் தடுப்புப் பிரிவின் தலைவி தெரிவித்துள்ளார். தினசரி புதிய நோயாளர்கள் 70 ஆயிரம் வரை கண்டு பிடிக்கப்படுகின்றனர்.

தினசரி இடம்பெறும் கொவிட் மரணங்களின் எண்ணிக்கையும் இரண்டாயிரத்தை தாண்டி உள்ளது. அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொவிட் தடுப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றத்துக்கும், அமெரிக்க மக்களின் நலன்களுக்கும் உருமாற்றம் பெற்று வீரியம் அடைந்து பரவி வரும் கொரோணா வைரஸ் பெரும் சவாலாக மாறி உள்ளதாகவும் அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...