கொவிட் தடுப்பூசி மருந்தினை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை

Date:

கொவிட் தடுப்பூசி மருந்தினை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என பொது சுகாதார அதிகாரிகள் தொழிற்சங்கம் வலியுறுத்தி உள்ளது. தொழிற்சாலைகள் பலவற்றிலும் ஏனைய இடங்களிலும் நோய் பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில் அதை சமாளிக்கும் வகையில் தனியார் பிரிவுக்கும் தடுப்பூசி இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக நாட்டின் தொழிலாளர் பிரிவுக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான வசதிகள் அரசாங்கத்திடம் தற்போது இல்லாவிட்டால் தனியார் பிரிவின் பங்களிப்பு பெறப்பட வேண்டும் என பொது சுகாதார அதிகாரிகள் தொழிற்சங்கத் தலைவர் உபுல் றோஹன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

ராஷித் அல்-கன்னூசியின் உடல்நிலை குறித்து சர்வதேச முஸ்லிம் உலமாக்கள் ஒன்றியம் கவலை: துனிசிய அரசிற்கு கோரிக்கை!

துனிசியாவின் மூத்த அரசியல் தலைவரும், பிரபல இஸ்லாமிய அறிஞருமான ஷேக் ராஷித்...

முதலீட்டாளர் நம்பிக்கையில் இலங்கை முன்னேற்றம்

முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை தொடர்பில் வேகமாக முன்னேறி வரும்...

சுரேஷ் சலேயின் ரிட் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச்...

இன்று முதல் தென்மேற்குப் பகுதியில் மழை அதிகரிக்கும்!

இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சி...