கொவிட் தடுப்பூசி மருந்தினை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை

Date:

கொவிட் தடுப்பூசி மருந்தினை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என பொது சுகாதார அதிகாரிகள் தொழிற்சங்கம் வலியுறுத்தி உள்ளது. தொழிற்சாலைகள் பலவற்றிலும் ஏனைய இடங்களிலும் நோய் பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில் அதை சமாளிக்கும் வகையில் தனியார் பிரிவுக்கும் தடுப்பூசி இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக நாட்டின் தொழிலாளர் பிரிவுக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான வசதிகள் அரசாங்கத்திடம் தற்போது இல்லாவிட்டால் தனியார் பிரிவின் பங்களிப்பு பெறப்பட வேண்டும் என பொது சுகாதார அதிகாரிகள் தொழிற்சங்கத் தலைவர் உபுல் றோஹன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

மாற்றியமைக்கப்பட்ட வாகனப் பதிவு எண்களை பயன்படுத்துவோருக்கு கடும் எச்சரிக்கை!

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கப்படும் வழக்கமான வாகனப் பதிவு இலக்கங்களுக்குப் பதிலாக,...

மீண்டும் கொழும்பு வர விசேட போக்குவரத்து சேவை

புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் கொழும்புக்கு திரும்புவதை முன்னிட்டு...

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை...

6 நாட்களில் ஒரு பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டிய இலங்கை போக்குவரத்துச் சபை

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட விசேட பேருந்து...