ராஷித் அல்-கன்னூசியின் உடல்நிலை குறித்து சர்வதேச முஸ்லிம் உலமாக்கள் ஒன்றியம் கவலை: துனிசிய அரசிற்கு கோரிக்கை!

Date:

துனிசியாவின் மூத்த அரசியல் தலைவரும், பிரபல இஸ்லாமிய அறிஞருமான ஷேக் ராஷித் அல்-கன்னூசியின் (Sheikh Rached Ghannouchi) உடல்நிலை மோசமடைந்து வருவது குறித்தும், அவர் சிறையில் எதிர்கொள்ளும் கடுமையான சூழல் குறித்தும் சர்வதேச முஸ்லிம் உலமாக்கள் ஒன்றியம் (IUMS) தனது பலத்த கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சர்வதேச முஸ்லிம் உலமாக்கள் ஒன்றியத்தின் தலைவர் ஷேக் கலாநிதி அலி முஹியித்தீன் அல்-கறதாஃகி (Ali Al-Qaradaghi) விடுத்துள்ள அறிக்கையில்,

85 வயதான ஷேக் ராஷித் அல்-கன்னூசி சிறையில் மருத்துவ வசதிகளின்றியும், குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்களைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டும் வைக்கப்பட்டுள்ளதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் கருத்துக்கள் மற்றும் அடக்குமுறைக்கு எதிரான குரல்களுக்காக வழங்கப்படும் அநீதியான தீர்ப்புகளை ஒன்றியம் கடுமையாகக் கண்டிக்கிறது.

அவரது வயது மற்றும் மோசமடைந்து வரும் ஆரோக்கிய நிலையைக் கருத்தில் கொண்டு, அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என துனிசிய அரசிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவருக்கு முழுமையான மருத்துவ சிகிச்சையை வழங்க வேண்டும் என்றும், அவரது உடல்நிலை குறித்த உண்மையான தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

“நீதி என்பது பிரிக்க முடியாத ஒரு பண்பு; அநீதி எந்தவொரு நாட்டிற்கும் சட்டத்திற்கும் பொருந்தாது.” கலாநிதி அலி முஹியித்தீன் அல்-கறதாஃகி, தலைவர் – சர்வதேச முஸ்லிம் உலமாக்கள் ஒன்றியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

முதலீட்டாளர் நம்பிக்கையில் இலங்கை முன்னேற்றம்

முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை தொடர்பில் வேகமாக முன்னேறி வரும்...

சுரேஷ் சலேயின் ரிட் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச்...

இன்று முதல் தென்மேற்குப் பகுதியில் மழை அதிகரிக்கும்!

இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சி...

தேசிய பாதுகாப்பை மீள் உறுதி செய்தலில் நீதித்துறையின் வகிபாகம்.

நேற்றைய தொடர்ச்சி... பகுதி-02 குடும்பக் கட்டமைப்புகள் பல தலைமுறைகளைக் கொண்டதாகவும் சமூக அடிப்படையிலானதாகவும் இருந்தன. மத...