சட்டத்துறை இறுதியாண்டு மாணவன் மீதான தாக்குதல் | பொலிஸ் அதிகாரிகளை கைது செய்யுமாறு அறிவுறுத்தல்

Date:

சட்டத்துறையில் கல்விபயிலும் இறுதி ஆண்டு மாணவன் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அந்தவகையில் சம்பவத்துடன் தொடர்புடைய பேலியகொட பொலிஸ் நிலைய அதிகாரிகளை தண்டனை மற்றும் சித்திரவதை சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பேலியகொடை பொலிஸ் அதிகாரிகள் கடந்த பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி அன்று மிகார குணரத்ன என்ற சட்டத்துறை மாணன் மீது தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகின்றது.

இவ்வாறு தாக்கப்பட்ட மாணவன் மத்திய மாகாண முன்னாள் ஆளுநர், ஜனாதிபதி ஆலோசகர் மைத்ரி குணரத்னவின் மகன் மற்றும் சட்டத்தரணி சரித குணரத்னாவின் சகோதரர் என அடையாளம் காணப்பட்டார்.

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட சந்தேக நபரைப் பார்க்க பேலியகொடை பொலிஸ் நிலையத்திற்கு வந்தபோது கிட்டத்தட்ட 10 பொலிஸ் அதிகாரிகள் அவரைத் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...