சர்வதேச பாவனையாளர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு மன்னாரில் விசேட விழிப்புணர்வு நிகழ்வு

Date:

“zero Accidents” எனும் தொணிப்பொருளில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் ஏற்பாட்டில் வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் ஒழுங்கமைப்பில் விசேட நடமாடும் விழிப்புணர்வூட்டல் நிகழ்சித் திட்டம் மன்னார் நகர் மத்திய பகுதியில் இன்று திங்கட்கிழமை(15) காலை 9 மணியளவில் இடம் பெற்றது.
வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கத்துடனும் போக்குவரத்து பயணங்களின் போது தரமான தலைக்கவசங்களை அணிவதன் முக்கியத்துவம் தொடர்பாக மேற்படி விழிப்புணர்வு நிகழ்சி திட்டத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
அதே நேரம்  இலங்கை  தரச் சான்று நிறுவனத்தின் அனுமதி அற்ற  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தலைக்வசங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாகவும் அது தொடர்பான விழிப்புணர்வும் அவ்வாறான தலைக்கவசங்களை பயன்படுத்துபவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் துண்டு பிரதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை ஊழியர்கள்   வீதி போக்குவரத்து பொலிஸார் மாவட்ட செயலக உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டு விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடதக்கது.
மன்னார்  நிருபர்

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...