சுயெஸ் கால்வாய் வழமைக்கு திரும்பியது | 320 கப்பல்களின் பயணம் ஆரம்பம்

Date:

ஒரு வார காலத்திற்கு பின்னர் சுயெஸ் கால்வாயின் கப்பல் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளன.

அதிக கொள்கலன்களுடன் பயணித்த எவர்கிவன் கப்பல் கடந்த செவ்வாய்க்கிழமை சுயெஸ் கால்வாயில் பயணித்த போது தரைதட்டியிருந்தது. அங்கு வீசிய புயல் காரணமாக குறித்த கப்பலின் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டிருந்தது.

இதனால் சுயேஸ் கால்வாய் ஊடான கப்பல் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.பல நாடுகளுக்கு சொந்தமான 320 கப்பல்கள் தமது போக்குவரத்து நடவடிக்கையினை முன்னெடுக்க முடியாமல் அங்கு நங்கூரமிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து கப்பல் போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மீட்பு பணியாளர்கள் முன்னெடுத்திருந்த நிலையில், நேற்றைய தினம் அது விரிவுப்படுத்தப்பட்டிருந்தது.

இதற்கமைய, சுயெஸ் கால்வாயில் தரைதட்டியிருந்த கப்பல் முழுமையாக மீட்கப்பட்டு, அங்கு கப்பல் போக்குவரத்து வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Popular

More like this
Related

தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க முடியும்: சுங்கத் திணைக்களம்

நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு...

செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளுக்காக 1.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுக்கு 1.9...

இலங்கையின் மோசமான வரிக்கொள்கை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை!

இலங்கையின் வரிக் கொள்கைகள் நாட்டின் 2022 அழிவுகரமான பொருளாதார நெருக்கடியில் முக்கிய...

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...