சுயெஸ் கால்வாய் வழமைக்கு திரும்பியது | 320 கப்பல்களின் பயணம் ஆரம்பம்

Date:

ஒரு வார காலத்திற்கு பின்னர் சுயெஸ் கால்வாயின் கப்பல் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளன.

அதிக கொள்கலன்களுடன் பயணித்த எவர்கிவன் கப்பல் கடந்த செவ்வாய்க்கிழமை சுயெஸ் கால்வாயில் பயணித்த போது தரைதட்டியிருந்தது. அங்கு வீசிய புயல் காரணமாக குறித்த கப்பலின் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டிருந்தது.

இதனால் சுயேஸ் கால்வாய் ஊடான கப்பல் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.பல நாடுகளுக்கு சொந்தமான 320 கப்பல்கள் தமது போக்குவரத்து நடவடிக்கையினை முன்னெடுக்க முடியாமல் அங்கு நங்கூரமிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து கப்பல் போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மீட்பு பணியாளர்கள் முன்னெடுத்திருந்த நிலையில், நேற்றைய தினம் அது விரிவுப்படுத்தப்பட்டிருந்தது.

இதற்கமைய, சுயெஸ் கால்வாயில் தரைதட்டியிருந்த கப்பல் முழுமையாக மீட்கப்பட்டு, அங்கு கப்பல் போக்குவரத்து வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...