தந்தையை நோக்கி ஓடி வந்த 7 வயது சிறுமியை சுட்டுக் கொன்ற மியன்மார் பொலிஸ்

Date:

மியன்மாரில் ஏழு வயதே ஆன சிறுமியை அந்நாட்டு பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளதாக BBC தெரிவித்துள்ளது.
மியன்மாரில் கடந்த மாதம் இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சியை அடுத்து கொல்லப்பட்ட மிகவும் இளவயது சிறுமி இவராவார்.

கின் மியோ சிட்டி என்ற சிறுமியே சுட்டுக் கொல்லப்பட்டவராவார்.இது தொடர்பில் சிறுமியின் பெற்றோர் தெரிவிக்கையில்,
மண்டேலா நகரில் உள்ள தமது வீட்டில் சோதனை நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டவேளை சிறுமி தந்தையை நோக்கி ஓடி வருகையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தனர்.

கொல்லப்பட்ட டசின் கணக்கான மக்களில் 20 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் அடங்குவதாக ‘சேவ் த சில்ரன்’ அமைப்பு தெரிவித்துள்ளது.
மியன்மாரில் நடந்துவரும் போராட்டங்களில் இதுவரை 164 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 261 இற்கும் அதிகம் என அரசியல் கைதிகளுக்கான உதவிக்குழு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...