திருகோணமலையில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி ஒருவர் பலி

Date:

திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றுடன் காரொன்று மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநனர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம், இன்று (30) காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த கார், 5ஆம் கட்டைப் பகுதியில் வீதியோரத்தில் நின்றிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஏற்பட்டுள்ள இந்த விபத்தில், மூன்று பிள்ளைகளின் தந்தையான திருகோணமலை கப்பல்துறை பகுதியைச் சேர்ந்த கே.அந்தோனிசாமி (48 வயது) எனும் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Popular

More like this
Related

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...