மகா சிவராத்திரி தினத்தை வெகு விமரிசையாக கொண்டாடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்குமாறு பிரதமரிடமிருந்து ஆலோசனை

Date:

மகா சிவராத்திரி தினத்தை வெகு விமரிசையாக கொண்டாடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்குமாறு புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்களுக்கான அமைச்சரும், கௌரவ பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இந்து சமய மற்றும் கலாசார அலுவல்களுக்கான திணைக்களத்திற்கு ஆலோனை வழங்கப்பட்டுள்ளது.

இந்துக்களின் முக்கியமான விரத தினங்களில் ஒன்றான மகா சிவராத்திரி இம்முறை 2021 மார்ச் மாதம் 11 ஆந் திகதி அனுட்டிக்கப்படவுள்ளது.
மகா சிவராத்திரி தினத்தை இந்துக் கோயில்களில் மிகவும் சிறப்பான வகையில் ஏற்பாடு செய்வதற்கு உற்சாகமூட்டுமாறு பிரதமர் அவர்கள் இந்து சமய மற்றும் கலாசார அலுவல்களுக்கான திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.

அதற்கமைய, இலங்கையில் இந்து பக்தர்கள் அதிகம் வாழும் பிரதேசங்களிலுள்ள செயலாளர் பிரிவுகளை முன்னிலைப்படுத்தி விசேட இந்து சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன. மேலும் இந்துசமயக் குழந்தைகளுக்கு கோயில்களில் மகா சிவராத்திரியின் மகிமையை உணர்த்துதல் மற்றும் இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...