மொரகொடவின் பதவியேற்பில் தாமதம் | நீடிக்கும் மர்மம்

Date:

இந்தியாவுக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட நியமிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் அவர் புதுடில்லி சென்று தமது கடமைகளை இன்னும் பொறுப்பேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் அலுவலகத்தை மேற்கோள்காட்டி இன்று இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மொரகொடவின் நியமனத்தை பல மாதங்களுக்கு முன்பே இந்தியா ஏற்றுக் கொண்டிருந்தது. இருந்தாலும் புதுடில்லியில் உள்ள உயர் ஸ்தானிகர் பகதவிக்கான நாற்காலி இன்னமும் காலியாகவே உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்புத் துறை முக கிழக்கு வாயில் விவகாரம், ஐ.நா மனித உரிமை பேரவையில் இந்தியாவின் நிலைப்பாடு என்பன காரணமாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளில் முன்னரை விட தளர்வு நிலை ஏற்பட்டுள்ள பின்னணியில் மொரகொடவின் பதவியேற்பு தாமதமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மிலிந்த மொரகொட விரைவில் இந்தியா செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர அவர் எப்போது அங்கு செல்வார் என்பது இன்னமும் தெளிவுபடுத்தப்படவில்லை.

Popular

More like this
Related

கல்வி சீர்திருத்தங்கள் குறித்து இந்தியா பிரதமருடன் பிரதமர் ஹரிணி கலந்துரையாடல்

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,...

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த மூவர் கைது!

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், ஒரு பொலிஸ்...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி. மீ. இற்கும் அதிக மழை

இன்றையதினம் (17) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர்...

நான்கு இலட்சத்தை கடந்த தங்க விலை!

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று...