மொரகொடவின் பதவியேற்பில் தாமதம் | நீடிக்கும் மர்மம்

Date:

இந்தியாவுக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட நியமிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் அவர் புதுடில்லி சென்று தமது கடமைகளை இன்னும் பொறுப்பேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் அலுவலகத்தை மேற்கோள்காட்டி இன்று இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மொரகொடவின் நியமனத்தை பல மாதங்களுக்கு முன்பே இந்தியா ஏற்றுக் கொண்டிருந்தது. இருந்தாலும் புதுடில்லியில் உள்ள உயர் ஸ்தானிகர் பகதவிக்கான நாற்காலி இன்னமும் காலியாகவே உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்புத் துறை முக கிழக்கு வாயில் விவகாரம், ஐ.நா மனித உரிமை பேரவையில் இந்தியாவின் நிலைப்பாடு என்பன காரணமாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளில் முன்னரை விட தளர்வு நிலை ஏற்பட்டுள்ள பின்னணியில் மொரகொடவின் பதவியேற்பு தாமதமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மிலிந்த மொரகொட விரைவில் இந்தியா செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர அவர் எப்போது அங்கு செல்வார் என்பது இன்னமும் தெளிவுபடுத்தப்படவில்லை.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...