இனிமேல் குடும்பப் பிரச்சினைகளிலும் பொலிஸார் தலையிடலாம்

Date:

நாட்டில் அதிகரித்து வரும் வீட்டு வன்முறைகளைத் தடுக்கும் வகையில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் சர்ச்சைகளை தீர்த்து வைக்கும் விடயத்தில் தலையிடுமாறு பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்துக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் சர்ச்சைகள் அதன் தொடராக இடம்பெறும் வீட்டு வன்முறைகள் என்பன கடந்த காலங்களில் கணிசமாக அதிகரித்துள்ளன. குறிப்பாக மலையகப் பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அண்மைக்கால மதிப்பீடுகள் தெரிவிக்;கின்றன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சில நேரங்களில் இந்த சம்பவங்கள் கொலையிலும் முடிவடைகின்றன. கணவன் மனைவியை கொல்வது அல்லது மனைவி கணவனைக் கொல்வது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அண்மையில் 28 வயதான தனது மனைவியை கொலை செய்து கொத்மலை நீர்த் தேக்கத்தில் வீசிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. குடும்பத் தகராறே இதற்கு முக்கிய காரணம் என்று தெரிய வந்துள்ளது.

எனவே இவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக குடும்பத் தகராறுகளில் தலையிட்டு சமரசம் செய்து வைக்குமாறு சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...