ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கையை தொடர்ந்து தம்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜமாஅதே இஸ்லாமியின் அறிக்கை

Date:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை பற்றி ஊடகங்களில் வெளியான செய்திகளில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி பற்றியும், மாணவர் இயக்கத்தைத் தொடர்புபடுத்தியும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் தொடர்பாகவும் பல அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதை அறிந்து கொண்டோம்.

இக்குற்றச்சாட்டுக்களை நாம் முற்றாக மறுக்கும் அதேவேளை இவை பற்றிய எந்த நீதி விசாரணைக்கும் எமது பூரண ஒத்துழைப்பை வழங்கவும் உறுதியளிக்கிறோம்.

தவறான நோக்கங்களுடன் ஓரிருவரினால் வழங்கப்பட்ட சாட்சியங்களை அடிப்படையாக வைத்தே இந்த முடிவுகள் பெரும்பாலும் எட்டப்பட்டுள்ளன என்றே நாம் நம்புகின்றோம்.

உரிய நீதி விசாரணைகளின் போது சட்ட ரீதியாக எமது குற்றமற்றதன்மையை நிரூபிக்க முடியும் என்பதை நாம் உறுதியாக நம்புகிறோம்.

எம்.எச்.எம். ஹஸன்
உதவிப் பொதுச் செயலாளர்
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
28.02.2021

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...