கிராமிய விளையாட்டு மைதானங்களை அமைத்தல் செயல் திட்டத்தின் கீழ் மன்னார் பொன்தீவு கண்டல் கிராமத்தில் அடிக்கல் நாட்டி வைப்பு

Date:

தேசிய ரீதியாக நடை பெறும் கிராமங்கள் தோறும் கிராமிய விளையாட்டு மைதானங்களை அமைத்தல் செயல் திட்டத்தின் கீழ் நானாட்டான் பிரதேசச் சயெலாளர் பிரிவில் பொன் தீவு கண்டல் கிராமத்தில் உள்ள சென் அண்ரனிஸ் விளையாட்டுக் கழக மைதானம் புனரமைப்பிற்காக இன்று செவ்வாய்க்கிழமை (2) காலை 10.25 மணியளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏஸ்ரான்லி டி மெல் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது.

குறித்த நிகழ்வில் நானாட்டான் பிரதேசச் செயலாளர் மா.சறிஸ்கந்தகுமார் , நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் தி.பரஞ்சோதி , மன்னார் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் பிரின்ஸ் லெம்பேட் , முன்னாள் மாகாண சபை உறுப்பினர் முஹமட் அலிகான் செரீப், மற்றும் விளையாட்டு கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...