கோட்டாபய ராஜபக்ஸவிற்கும், நரேந்திர மோடிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

தொலைபேசி ஊடாக இன்று (13) பிற்பகல், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் கலந்துரையாடியுள்ளதாக இந்திய பிரதமர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

அபிவிருத்தி பணிகள் மற்றும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளதாக இந்திய பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, கொவிட் தொற்று காரணமாக எதிர்நோக்கியுள்ளதாக சவால்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவின் அயல் நாட்டு கொள்கையில், இலங்கைக்கே முக்கியத்தும் வழங்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் தெரிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

டிரம்ப்புக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்டதற்கு வெள்ளை மாளிகை கடும் எதிர்ப்பு!

தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள வெனிசுவேலாவில் மக்களின் ஜனநாயக உரிமைகளை...

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...