பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி தோட்ட முகாமையாளர்கள் ஹட்டனில் ஆர்ப்பாட்டம்

Date:

மஸ்கெலியா ஓல்டன் தோட்ட முகாமையாளரை தாக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல் தடவையாக தோட்ட முகாமையாளர்கள் இன்று (03) ஹட்டன் மல்லியைப்பூ சந்தியில் இரு மருங்கிலும் பதாதைகளை காட்சிபடுத்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா ஓல்டன் தோட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கும் முகாமைத்துவத்திற்கும் இடையில் ஏற்பட்ட தொழில் பிணக்குகளையடுத்து தொழிலாளர்கள் இரண்டு வாரங்களுக்கு மேல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் கடந்த 10 திகதி தோட்டத்தொழிலாளர்களுக்கு சம்பளமும் வழங்கப்படவில்லை. சம்பளம் பின் வழங்கியமைக்கும் குறித்த நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததன் காரணமாகவும் கோபம் கொண்ட தொழிலாளர்கள் தோட்ட முகாமையாளர்கள் மற்றும் உதவி முகாமையாளர் தாக்கப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே தோட்ட முகாமையாளர்கள் இன்று (03) ஹட்டன் மல்லியைப்பூ சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டகாரர்கள் ´தோட்ட அதிகாரிகளுக்கு எதிரான வன்முறையினை நிறுத்து,´பெருந்தோட்டத்தை இலக்கு வைத்து செய்கின்ற கொடூர தாக்குதல்களுக்கு தண்டனை வழங்கு´, பெருந்தோட்டத்தின் முதுகெலும்பான பெந்தோட்ட சேவையாளர்களை பாதுகாப்போம்´, போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை காட்சி படுத்தியவாறு வலது கையில் கறுப்பு பட்டி அணிந்து, கறுப்பு கொடிகளை தமது வாகனங்களிலும், கையிலும் காட்சி படுத்தியவாறு எதிர்ப்பு நடவடிக்கையில் சுகாதார பொறிமுறைக்கமைய அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக ஏழு பெண்கள் மற்றும் ஒரு ஆண் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த வழக்கு இன்று (03) ஹட்டன் நீதி மன்றில் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

ஜனாதிபதி நிதியம்- ஜனசக்தி அறக்கட்டளை இடையே விசேட புரிந்துணர்வு ஒப்பந்தம்!

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி...

வித்யா கொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...