மொரகொடவின் பதவியேற்பில் தாமதம் | நீடிக்கும் மர்மம்

Date:

இந்தியாவுக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட நியமிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் அவர் புதுடில்லி சென்று தமது கடமைகளை இன்னும் பொறுப்பேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் அலுவலகத்தை மேற்கோள்காட்டி இன்று இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மொரகொடவின் நியமனத்தை பல மாதங்களுக்கு முன்பே இந்தியா ஏற்றுக் கொண்டிருந்தது. இருந்தாலும் புதுடில்லியில் உள்ள உயர் ஸ்தானிகர் பகதவிக்கான நாற்காலி இன்னமும் காலியாகவே உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்புத் துறை முக கிழக்கு வாயில் விவகாரம், ஐ.நா மனித உரிமை பேரவையில் இந்தியாவின் நிலைப்பாடு என்பன காரணமாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளில் முன்னரை விட தளர்வு நிலை ஏற்பட்டுள்ள பின்னணியில் மொரகொடவின் பதவியேற்பு தாமதமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மிலிந்த மொரகொட விரைவில் இந்தியா செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர அவர் எப்போது அங்கு செல்வார் என்பது இன்னமும் தெளிவுபடுத்தப்படவில்லை.

Popular

More like this
Related

பதிவாளர் நாயகம் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம்!

கணினி அமைப்பு கோளாறு காரணமாக இன்று (24) பதிவாளர் நாயகம் அலுவலக...

நாட்டின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்

மேற்கு, தெற்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா...

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...