ஹொரவ்பொத்தானையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் | நான்கு பேர் காயம்

Date:

அனுராதபுரம் – ஹொரவ்பொத்தானை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வாகனங்கள் சில சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இச்சம்பவம் நேற்றிரவு(28) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹொரவ்பொத்தானை- முக்கரவெவ பகுதியில் மதுபோதையில் சென்ற நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாகவும், இதனை அடுத்து மதவாச்சி சந்தி பகுதியிலிருந்து வந்து கொண்டிருந்த வாகனங்களுக்கு தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் வாகனங்களுக்கு சேதம் விளைவிக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மோதல் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், முப்படையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாவும் தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
முஹம்மட் ஹாசில் 

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...