ஈரானின் அணுஉலைமீது இஸ்ரேல் சைபர் தாக்குதல் | யுரேனியத்தை பதப்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை ஈரான் அறிமுகப்படுத்திய சில மணிநேரங்களில் சம்பவம்

Date:

இஸ்ரேல் ஈரானின் அணுஉலை மீது சைபர் தாக்குதலை மேற்கொண்டு சேதத்தை ஏற்படுத்திள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் நடான்சில் உள்ள தனதுஅணுநிலை மீது பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளது.
நடான்சில் உள்ள அணுநிலையத்தில் யுரேனியத்தை பதப்படுத்தும் சாதனமொன்றை தொடக்கிவைத்த மறுநாள் இந்த பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றுள்ளது என ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானின் அணுசக்தி விவகாரங்களிற்கான முக்கிய அதிகாரி அலிஅக்பர் சலேகி இதனைதெரிவித்துள்ள அதேவேளை இந்த பயங்கரவாத தாக்குதலை யார் மேற்கொண்டிருக்கலாம் என்பது குறித்த விபரங்களை வெளியிட மறுத்துள்ளார்.
பயங்கரவாத தாக்குதல் காரணமாக டெஹ்ரானின் தென்பகுதியில் உள்ள அணுநிலையில் மின்துண்டிப்பு இடம்பெற்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இஸ்ரேலிய ஊடகங்கள் புலனாய்வு வட்டாரங்களை மேற்கோள்காட்டி சைபர் தாக்குதல் இடம்பெற்றது என்ற செய்தியை வெளியிட்டுள்ளன.
ஈரானின் அணுநிலையத்தில் ஏற்பட்ட மின்துண்டிப்பிற்கு இஸ்ரேலின் சைபர் தாக்குதலே காரணம் என இஸ்ரேலின் அரச ஒலிபரப்பு சேவையான கான் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் சைபர் தாக்குதல் மூலமே மி;ன்துண்டிப்பு இடம்பெற்றது என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் சைபர் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என கருத முடியும் என ஹரெட்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
ஈரான் அணுவாயுதங்களை உற்பத்திசெய்யும் திறனை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்ற நிலையில் இந்த பிரச்சினைக்கு விபத்து காரணமில்லை திட்டமிட்ட சதிமுயற்சியே இடம்பெற்றிருக்கலாம் என கருதஇடமுண்டு பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர்தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...