ஊரடங்கு தொடர்பில் வெளியிட்ட அறிவிப்பு | இராணுவத் தளபதி சவேந்திர சில்வா

Date:

நாட்டில் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும், பொது மக்கள் கொரோனா பரவாமல் தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொரோனா நிலைமை குறித்து விவாதிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடைலை அடுத்து தற்போது இடம்பெறும் ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கை மக்கள் மிகவும் புத்திகூர்மையுடையவர்கள். ஆகவே கொரோனா பரவாமல் தம்மை தாமே பாதுகாத்துக்கொள்ள அவர்களுக்கு தெரியும். அவர்கள் அதை செய்வார்கள் என நாம் நம்புகின்றோம்.

நாடளாவிய ரீதியில் பல இடங்களில் புத்தாண்டுக்குப் பின் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில் பயணக்கட்டுப்பாடுகள், ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா என்ற செய்தி பரவலாக வெளியாகி உள்ளது.

எனினும் இலங்கை மக்களை மீண்டும் அவ்வாறான நிலைக்கு கொண்டுசெல்ல நாம் தயாரில்லை.

ஆகவே வார இறுதி நாட்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது. எனினும் அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு பொது மக்களிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...