கட்டுநாயக்க விமான நிலைய கழிப்பறையில் மீட்கப்பட்ட பாரிய தொகை ஆபரணங்கள்

Date:

கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமானநிலையத்தில் கைவிடப்பட்டிருந்த ஒரு தொகை தங்க ஆபரணங்களை சுங்கபிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.

விமானநிலையத்தின் பயணிகள் கழிப்பறை பகுதியில் குறித்த தங்க ஆபரணதொகை கைவிடப்பட்ட நிலையில் சுங்கப்பிரிவினரால் இன்று மீட்கப்பட்டுள்ளதாக சுங்கத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் விஜித ரவிப்ரிய தெரிவித்துள்ளார்.

சுமார் 13 மில்லியன் பெறுமதியான தங்க ஆபரணங்கள் அடங்கிய மூன்று பொதிகள் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 220 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களை கடத்துவதற்கு முற்பட்ட சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க திணைக்களத்தின் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீர்கொழும்பு பகுதியில் வசிக்கும் 37 வயதுடைய நபர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் குறித்த சந்தேக நபரினால் கடத்துவதற்கு முற்பட்ட மேலும் ஒரு தொகை தங்க ஆபரணங்கள் இவ்வாறு கைவிடப்பட்டிருக்கலாம் என சுங்கத்திணைக்களம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சுங்க திணைக்களத்தின் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...