காலி குற்றவியல் பிரிவில் ஒப்படைக்கப்பட்ட ‘பொடி லெஸி’

Date:

இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட ‘பொடி லெஸி’ காலி குற்றவியல் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் இந்தியாவிற்கு தப்பிச் சென்ற குறித்த சந்தேகபர் அந்நாட்டிலிருந்து இன்று (27) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பிரபல பாதாளக் குழு உறுப்பினரும் சர்வதேச ரீதியிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல்வேறு கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளியுமான ‘பொடி லெஸி’ என அழைக்கப்படும் ஆருமாஹந்தி ஜனித் மதுசங்க இந்தியாவிலிருந்து இன்று (27) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட அவரை, இந்தியா சென்ற விசேட பொலிஸ் குழுவினரால், இன்று (27) அதிகாலை 5.55 மணிக்கு மும்பையில் இருந்து வந்த ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 142 இலக்க விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் சந்தேகநபருமான ‘பொடி லெஸி’ எனப்படும் ஜனித் மதுசங்க, 2024 டிசம்பர் 09ஆம் திகதி நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டதன் பின்னர் தலைமறைவாகியிருந்த நிலையில் கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தார்.

Popular

More like this
Related

‘ஈஸ்டர் தாக்குதல்கள்: நீதியும் தண்டனையும்’ நூல் அறிமுக நிகழ்வு

ஏப்ரல் 21, 2019 அன்று நாட்டை உலுக்கிய ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள்...

அமைதிக்கான நடைப்பயணத்தில் பங்கேற்கும் பிக்குகள் குழு நாட்டிற்கு வருகை

அமைதிக்கான நடைப்பயணத்தில் பங்கேற்பதற்காக பௌத்த பிக்குகள் குழுவினர் இன்று (17) காலை...

புத்தளம் தள வைத்தியசாலையில் வரலாற்றுச் சாதனை: முதன்முறையாக முள்ளந்தண்டு நேராக்கல் சத்திரசிகிச்சை வெற்றி!

புத்தளம் தள வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மிகவும்...