குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்.

Date:

திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவிபாஞ்சான் குளத்திற்கு குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வனர்த்தம் இன்று (18) காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த சிறுவர்கள் முள்ளிப்பொத்தானை-ஈச்சநகர் பகுதியைச் சேர்ந்த சுஹைல் (14வயது) மற்றும் முள்ளிப்பொத்தானை- 95 யைச் சேர்ந்த அலிப்தீன் அஸ்கார் (14வயது) எனவும் தெரியவருகின்றது.

நோன்பு பிடித்துக் கொண்டு சிறுவர்கள் சிலர் சேர்ந்து தம்பலகாமம்- முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில் உள்ள பரவிப்பாஞ்சான் என்ற குளத்துக்கு குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அச்சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சிறுவர்களின் சடலம் தற்பொழுது கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

நாகரிக அரசியல் செய்யும் விஜய்: காதர் மொய்தீன் பாராட்டு!

இந்திய முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீனை முதல்வர் விஜய்...

வரலாறு படைக்கும் கஹட்டோவிட அல் பத்ரியா மகா வித்தியாலயம்

கஹட்டோவிட அல் பத்ரியா மகா வித்தியாலயம் 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற...

இலங்கையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் ‘பௌத்த – முஸ்லிம் உரையாடல்’ நூல் வெளியீடு இன்று மாலை BMICH-ல்

இலங்கையில் பல சமய, மத நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்தும்...

அதிவேக வீதியின் அடுத்த கட்ட நிர்மாணப் பணிகளுக்கு அமைச்சரவை அனுமதி

மத்திய அதிவேக வீதியின் ரம்புக்கனை முதல் கலகெதர வரையான பகுதியின் நிர்மாணப்...