கொவிட் 19 தடுப்பு மருந்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட மருத்துவர் பதவி நீக்கம்

Date:

தேசிய ஒளடதங்கள் ஒழுங்கமைப்பு அதிகார சபையின் உறுப்பினர் ஒருவரை சுகாதார அமைச்சர் பதவி நீக்கம் செய்துள்ளார்.

பிரபல சிறுவர் மருத்துவ இயல் நிபுணரான டாக்டர் லக்குமார்
பெர்னாந்து என்பவரே இவ்வாறு தேசிய ஒளடதங்கள் ஒழுங்கமைப்பு அதிகார சபையின் உறுப்பினர் பதவியிலிருந்து சுகாதார அமைச்சரால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் கொவிட் 19 தடுப்பூசி மருந்துகளுக்கு எதிரான அதிலும் குறிப்பாக சீனாவின் சினோபாம் தடுப்பூசி மருந்துக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை கொண்டவர். இந்த covid-19 தடுப்பூசிகள் இலங்கையர்களுக்கு வழங்கப்படுவது ஒரு பரீட்சார்த்த முயற்சியாகவே இருக்கின்றது என்றும், அதனை இப்போதைக்கு செய்யக்கூடாது என்ற நிலைப்பாட்டையும் இவர் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக பல இடங்களில் அவர் தனது கருத்துக்களை பதிவு செய்து வந்துள்ளார். இவர் சிறுவர் மருத்துவ சங்கத்தின் பிரதிநிதியாகவே தேசிய ஒளடதங்கள் ஒழுங்கமைப்பு அதிகார சபையின் உறுப்பினராக இருந்து வருகின்றார். சுகாதார அமைச்சர் இவருடைய இந்த எதிர் நிலைப்பாடு காரணமாக அவரை குறிப்பிட்ட சபையில் இருந்து பதவி நீக்கம் செய்துள்ளதாக இன்று தகவல்கள் வெளியாகி உள்ளன .

Popular

More like this
Related

இஸ்ரேல் சட்டங்களை மீறியமைக்காக 9 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்!

இஸ்ரேலின் நடைமுறையிலுள்ள குடிவரவு சட்டங்களை மீறியமைக்காக கைது செய்யப்பட்ட 9 இலங்கை பிரஜைகள்,...

இந்தியாவின் RAW மற்றும் RSS மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க பரிந்துரை: அமெரிக்க ஆணையத்தின் அதிரடி அறிக்கை!

இந்தியாவில் மத சுதந்திரம் கடுமையாக மீறப்படுவதாகக் கூறி, இந்தியாவின் உளவு அமைப்பான...

7வது ஆண்டாக மத நல்லிணக்கத்தை பறைசாற்றிய கிராண்ட்பாஸ் ஸ்ரீ இசிபதனாராம விகாரையின் இப்தார் நிகழ்வு!

இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை பறைசாற்றும் வகையில், கொழும்பு கிராண்ட்பாஸ் ஸ்ரீ இசிபதனாராம...

நல்லிணக்கம், சகவாழ்வு கலாசாரத்தை நோக்கிய தேசிய இளைஞர் இப்தார் நிகழ்வு

சமூகத்தின் பிரதான அங்கமாக இருக்கின்ற இளைஞர்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும், சகவாழ்வையும் கட்டியெழுப்பும்...