சாரதிகளுக்கான விசேட அறிவித்தல்

Date:

மதுபோதையில் வாகனம் செலுத்தும் வாகன சாரதிகளை கைது செய்வதற்கான விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதன்படி, இன்று (18) நண்பகல் 12 மணி முதல் நாளை (19) காலை 06 மணி வரை இந்த விசேட சுற்றி வளைப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
இதேவேளை, அதிவேக வீதி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வீதி விதிமுறைகளை மீறுவோர் குறித்தும் இன்று அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, அதிவேக வீதிகளின் பயணிக்கும் வாகன சாரதிகள், தமது பயண பாதையிலிருந்து தீடிரென மற்றைய பயண பாதைக்கு வாகனங்களை செலுத்த வேண்டாம் என அதிவேக வீதி நடவடிக்கை பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...