தனது சொத்துக்களை மக்களுக்கு பகிர்ந்தளித்த மூத்த அரசியல்வாதி

Date:

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு – சுதந்திரபுரம் பகுதியிலுள்ள தனது சொந்த காணியை, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் ஆவணத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கையெழுத்திட்டுள்ளார்.

சுதந்திரபுரம் பகுதியிலுள்ள 15 ஏக்கர் காணியொன்றையே அவர் இவ்வாறு மக்களுக்காக வழங்கியுள்ளதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

வீ.ஆனந்தசங்கரிக்கு சொந்தமான காணியின் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் குடியேறி வசித்து வந்த நிலையில், அந்த காணியை தமக்கே பகிர்ந்தளிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், தனது காணியை குறித்த மக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு, வீ.ஆனந்தசங்கரி, 2019ம் ஆண்டு பிரதேச செயலாளர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோரிடம் எழுத்துமூலம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

கொவிட் பரவல் காரணமாக காணிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை மந்தகதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான பின்னணியில், கிளிநொச்சியிலுள்ள வீ.ஆனந்தசங்கரியின் இல்லத்திற்கு சென்ற பிரதேச செயலக அதிகாரிகள், குறித்த காணியை பகிர்ந்தளிப்பது தொடர்பில் இன்று காலை கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.

இந்த கலந்துரையாடலை அடுத்து, தனது காணியை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் ஆவணத்தில் வீ.ஆனந்தசங்கரி கையெழுத்திட்டார்.

தான் கையெழுத்திட்ட ஆவணங்களுக்கு அமைய, காணிகளை உரிய வகையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கே பகிர்ந்தளிக்குமாறு, வீ.ஆனந்தசங்கரி அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த காணி தொடர்பிலான ஆவணங்கள் முறையாக செய்யப்பட்டு, எதிர்வரும் 3 மாத காலத்திற்குள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...